search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் மனோதங்கராஜ்"

    • முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக மதத்தை பற்றி பேசுகிறார்கள்.
    • தேசத்தினுடைய கடன் எவ்வளவு இருந்தது? இப்போது எவ்வளவு கடன் உயர்ந்துள்ளது?

    திருவட்டார்:

    குமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை காய்ந்து போன சருகு போன்றது. அதில் ஓன்றுமே இல்லை. அதை காற்றில் பறக்க விடலாம். இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை மக்களை கவரும் வகையில் உள்ளது.

    100 நாள் வேலை வாய்ப்பை 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறியிருப்பது, கிராமப்புற பொருளாதாரத்தை புரட்டி போடும் அளவிற்கு உள்ளது. பெட்ரோல், டீசல் விலையில் உள்ள பல்வேறு வேறுபாடுகள் களையப்படும். ஜி.எஸ்.டி. வரியால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நம்முடைய உழைப்பு நமக்கு தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசின் கஜானாவில் சேர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு அதிகமான சிறு தொழில்கள் அழிந்ததற்கும் ஜி.எஸ்.டி. காரணமாக உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. மறுசீராய்வு செய்யப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.

    கல்வியை எடுத்துக்கொண்டால் இன்றைக்கு சைனிக் ஸ்கூல், இந்தியாவினுடைய முக்கியமான பள்ளி. ராணுவத்திற்கு குழந்தைகளை தயாராக்க கூடிய அந்த பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி உள்ளது. அதை சார்ந்த அமைப்புகளுக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு அநீதியை செய்தார்கள்.

    இதை எல்லாம் ஒவ்வொரு குடிமகனும் சிந்தித்து பார்க்க வேண்டும். குமரி மாவட்டத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்யப்படுவதாக, பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அவரை பார்த்து சிரிக்கவா, அழவா என்று தெரியவில்லை.

    அவர் தான் மதத்தை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் எங்கள் பிரசாரத்தில் மதத்தைப் பற்றி பேசியுள்ளோமா? 100 சதவீதம் நாங்கள் பேசவில்லை.

    மதம் என்பது ஒரு மனிதனுடைய நம்பிக்கையை சார்ந்தது. அந்த நம்பிக்கை மாறுபட்டதற்கு உட்பட்டது. இன்று ஒரு நம்பிக்கையில் இருப்பான், நாளை ஒரு நம்பிக்கையில் இருப்பான். ஆனால் அந்த மதம் ஒன்றை மூலதனமாக வைத்து அரசியல் செய்யும் அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. தான். இதை யாரும் மறுக்க முடியாது.

    முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக மதத்தை பற்றி பேசுகிறார்கள். விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சாமானிய மக்களை பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் ஆகியவை மக்களிடம் சென்று விடக்கூடாது என்பதற்காக மத உணர்வை தூண்டும் வகையில் பா.ஜ.க. நாடு முழுவதும் இதனை செய்து கொண்டிருக்கிறது. அதைத்தான் பொன் ராதாகிருஷ்ணன் முடிந்த அளவு செய்து கொண்டிருக்கிறார்.

    மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அதிகமாக செய்ததாக கூறினார்கள். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கொண்டு வருவதாக கூறினார்கள். ஆனால் கொண்டு வரவில்லை. அறிவித்ததோடு நிற்கிறது. அவர்கள் தவறை அடையாளப்படுத்தும் வகையில் தான் செங்கலை தூக்கி பிரசாரம் செய்து வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

    அ.தி.மு.க. குறித்து நான் பேச விரும்பவில்லை. அவர்கள் வந்து போய் உள்ளனர். அ.தி.மு.க. இயக்கத்திற்கு யார் பிரதமர் வேட்பாளர் என்று யோசிக்க வேண்டும். 2 கூட்டணியிலும் இல்லாதவர்கள் எப்படி பேசுவார்கள்?.

    பொருளாதார நிபுணராக இருந்த மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது பெட்ரோல், டீசல் விலை எப்படி இருந்தது? ஆனால் மோடியின் ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை எப்படி உயர்ந்துள்ளது?

    தேசத்தினுடைய கடன் எவ்வளவு இருந்தது? இப்போது எவ்வளவு கடன் உயர்ந்துள்ளது? பல மடங்கு பட்டினி சாவு அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
    • கோவை தகவல் தொழில்நுட்ப பூங்கா பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    நாகர்கோவில்:

    அமைச்சர் மனோதங்கராஜ் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு மென்பொருள் ஏற்றுமதியில் நாம் சாதனை படைத்துள்ளோம். ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி மதிப்பிலான மென்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய அளவில் 3-வது இடம் ஆகும்.

    வரும் காலங்களில் இது கண்டிப்பாக மேலும் அதிகரிக்கும். 2030-ம் ஆண்டு ஒரு டிரில்லியன் டாலர் அளவிற்கு பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற கணக்கில் முதலமைச்சர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    ஐ.டி. துறையை பொறுத்தவரையில் 100 டிரில்லியன் டாலர் அளவிற்கு எட்ட வேண்டும் என்ற அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது 6 லட்சத்து 15 ஆயிரம் சதுர அடியில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. எந்தெந்த இடங்களுக்கு தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் தேவையோ அங்கு அமைக்கப்படும் சோளிங்கநல்லூர், திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    கோவை தகவல் தொழில்நுட்ப பூங்கா பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. நாகர்கோவிலில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஐ.டி.த்துறையை பொறுத்தவரையில் எதிர்காலத்திற்கு தேவையான வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் இன்னும் அதிகம் தேவைப்படுகிறது. இதனால் வேலை வாய்ப்புகள் அதிகம் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. வேலை வாய்ப்பு பெருகும் சூழ்நிலைகள் தான் தமிழ்நாட்டில் இன்று உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா 418 வருடங்களுக்கு பிறகு நடைபெற உள்ளது
    • கும்பாபிஷேக நாளன்று (6-ந் தேதி) பொது விடுமுறை வழங்க முதல் அமைச்சருக்கு கோரிக்கை

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருவட்டார் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஜூலை மாதம் 6-ந் தேதி மகா கும்பாபிஷேக விழா நடத்துவது குறித்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடை பெற்றது.

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த தலைமையில், எஸ்.பி ஹரி கிரண் பிரசாத் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு, துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    திருவட்டார் ஆதி கேசவப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா 418 வருடங்களுக்கு பிறகு நடைபெற உள்ளதை யொட்டி, மாவட்ட நிர்வாகத்திலுள்ள அனைத்து துறையினரும். ஒன்றிணைந்து பணியாற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காவல்துறையினர் வருகிற 29-ந் தேதி முதல் ஜூலை 9-ந் தேதி வரை பக்தர்க ளுக்கு தேவையான பாது காப்பு வசதிகளை செய்ய வேண்டும்.

    கும்பாபிஷேக தினத் தன்று கூடுதல் பாது காப்பு வழங்குவதோடு புறக்காவல் நிலையம் அமைத்தல், தனியார் வாகனங்களை ஒழுங்குப் படுத்தி அதற்குரிய இடத் தில் நிறுத்தம் செய்வதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

    மின்சார வாரியதுறை யினர் தங்கு தடையின்றி சமச் சீரான மின்சாரம் வழங் குவதோடு கோவிலை சுற்றியுள்ள சாலை யோரங்களில் உள்ள மின் விளக்குகள் தடையின்றி எரிவதற்கும் ஆவன செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    போக்குவரத்துக்கழகம் வாயிலாக மாவட்டத் திற்குட்பட்ட அனைத்து பேருந்துதடங்களிலிருந் தும் பக்தர்களின் தேவைக் கேற்ப சிறப்பு பேருந்துகள். இயக்கநடவடிக்கைமேற் கொள்ள வேண்டும்.

    திருவட்டாறு பேரூ ராட்சி வாயிலாக வாகன பவனி வரும் தெரு, வீதி கள் மற்றும் கிராமம் வரை யிலான சாலைகளையும், பேருந்து நிலையம் முதல் திருக்கோவில் வரையிலான சாலைகளையும் சீர் செய்தல், தெருவீதிகளை சுத்தமாக பராமரித்தல், பக்தர்களுக்கு தற்காலிக கழிவறைகள் அமைத்து அதற்கு தேவையான தண்ணீரை வழங்குதல், கும்பாபிஷேக நாட்களில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்தல், வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகளை நிறுத்தம் செய்ய அனும திக்காது இருத்தல்.

    வீதிகளில் குறுக்கே விளம்பர பேனர்கள் கட்டுவதை தடை செய்வதற் கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    சுகாதாரத்துறை அலு வலர்கள் பக்தர்களுக்கு வேண்டிய சுகாதார ஏற் பாடுகள் செய்தல், சுகா தார வசதிகள் செய்தல் மற்றும் சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

    மருத்துவத்துறை சார்பாக கோவிலுக்குச் சொந்தமான கட்டிடத் தில் புறநோயாளிகள் சிகிச்சைப்பிரிவு ஒன்று தற்காலிகமாக அமைத்து மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருந்தாளுனர் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அவசர வச திகள் செய்தவதை உறுதிப டுத்த வேண்டும்.

    பொதுப் பணித்துறையின் வாயிலாக பந்தல் மற்றும் பேரிகாட் பணிகளை பார்வையிட்டு உறுதித்தன்மை சான்றிதழ் வழங்க வேண்டும்.

    நெடுஞ்சாலை மற்றும் கிராமப்பணிகள் வாயி லாக பந்தல் அமைப்ப தற்கு அனுமதி வழங்குதல், திருவட்டாறு நான்குமுனை சந்திப்பு. திருவட்டாறு தபால் நிலையம் சந்திப்பு. திருவட்டாறு காங்கரை சந்திப்பு. திருவட்டாறு எக்சல் பள்ளி சந்திப்பு, ஆற்றார் கழுவனதிட்டை சந்திப்பு, திருக்கோயிலுக் குச்செல்லும் அனைத்து சாலைகளும் சீரமைத்து செப்பனிட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மேலும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கும்பாபிஷேக நாளன்று (6-ந் தேதி) பொது விடுமுறை வழங்க முதல் அமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    கூட்டத்தில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் டாக்டர் அலர்மேல் மங்கை, இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர், உடபட பலர் கலந்து கொண்டனர்.

    • பாரதிய ஜனதா கட்சியினருக்கு கண்டனம்
    • அமைச்சர் மனோதங்கராஜ் பற்றி அவதூறு பரப்புவோர் மீது வழக்கு

    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி யளித்தார்‌. அப்போது அவர் கூறியதாவது:

    மக்களால் தேர்வு செய்யப்பட்டு பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து 2-வது முறையாக வெற்றி பெற்று, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மந்திரிசபையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ள மனோ தங்கராஜ் கடந்த சில தினங்களுக்கு முன்பு குமாரகோவில் முருகன் கோவிலில் தேர் திருவிழாவில் வடம் பிடிக்க சென்ற போது வேண்டுமென்றே பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது.

    கடந்த ஆட்சியில் திருக்கோவில்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட இந்த ஆட்சியில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பா.ஜனதா கட்சியினர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தி.மு.க. ஆட்சியில் ரூ.43 கோடி குமரி மாவட்டத்தி லுள்ள திருக்கோயில்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக பிரசித்திபெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு மூலவருக்கு தங்க கவசம் செய்ய ரூ10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாகர்கோவில் நாகராஜா கோயில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிதாங்கோடு மகாதேவர் கோவில் உள்பட பல்வேறு கோயில்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இந்த ஆண்டு இதுவரை 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் குமரி மாவட்டத்திற்கு மட்டும் ரூ.43 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதை பாரதிய ஜனதாவினரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் வீண் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். தி.மு.க. ஆட்சி இந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்று பரப்பி வந்தவர்களால் அதிக நிதி ஒதுக்கியதால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

    இதை வைத்து அரசியல் செய்கிறார்கள். அமைச்சர் பற்றி வீண் வதந்திகளை பரப்புவோர் மீது முறையாக புகார் கொடுத்து வழக்கு தொடர்வோம். தமிழகத்தில் தற்போது பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில் மாநகராட்சியை பொருத்த மட்டில் அரசின் கொள்கை முடிவு படி தான் வரி உயர்த்தப்பட்டுள்ளது. மண்டலங்கள் மாற்றப்படவில்லை.

    நாகர்கோவில் நகரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைபணிகள் கடந்த மாதம் 31ம் தேதி முடிப்பதாக தெரிவித்தனர்.

    ஆனால் சில பணிகளின் காரணமாக பணிகள் முடிக்கப்படவில்லை. தற்பொழுது சவேரியார் ஆலயம் முதல் செட்டிகுளம் சந்திப்பு வரை உள்ள சாலையில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

    இன்னும் 2 மாத காலத்துக்குள் பணிகள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் .இவ்வாறு அவர் கூறினார்.

    • தேரோட்டத்தை அமைச்சர் மனோதங்கராஜ் வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்.
    • இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 12-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    கன்னியாகுமரி:


    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில்ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாகபெருந் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.


    இந்த திருவிழாவருகிற12-ந்தேதிவரை10நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.திருவிழவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல்12மணிக்கு சிறப்பு அன்னதானமும் மாலை6மணிக்கு சமய உரையும் இரவு7மணிக்கு இன்னிசை கச்சேரியும் 9மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

    9-ம் திருவிழாவான நாளை (சனிக்கிழமை) காலையில் தேரோட்டம் நடக்கிறது. காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அமைச்சர் மனோதங்கராஜ் தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    இதில் கலெக்டர் அரவிந்த், போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத், எம்.பி.க்கள் விஜய்வசந்த், விஜயகுமார், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியா குமரி சிறப்புநிலை பேரூ ராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலை வர் ஜெனஸ்மைக்கேல் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.


    தேர் நிலைக்கு நின்ற தும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் கஞ்சி தர்மமும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7.30 மணிக்கு தேவார இன்னிசையும் 8.45 மணிக்கு பக்தி பஜனையும் 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதி உலா வருதலும் நடக்கிறது.


    10-ம் திருவிழாவான 12-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு மண்ட கப்படி நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு நர்த்தன பஜனை யும் நடக்கிறது. 9 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. நள்ளிரவு 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    • 189 கி.மீ பூமிக்கு அடியிலும் 320 கி.மீ மின் கம்பம் வழியாகவும் கண்ணாடி இழை கேபிள் இணைக்கும் பணி நடைபெற உள்ளது.
    • கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப் பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திட்ட தலைமை ஐடிஐ மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் தமிழ்நாடு கண்ணாடி இழைவலைய மைப்பு நிறுவன திட்டம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:-

    பாரத்நெட் பேஸ் 2 திட்டத்தின் மூலம் தமிழ்நாட் டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளையும் தமிழ் நெட் திட்டத்தின் மூலம் 1ஜிபிபிஎஸ் அதிவேகஅலை கற்றை வழியாக இணைத்திட தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் ஏபி சிடி என நான்கு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு டி தொகுப்பில் கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் இடம் பெற்றுளளது. ஐடிஐ விமிடெட் பெங்களூரு நிறுவனத்திற்கு டி தொகுப்புக்கான வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் 95 கிராம ஊராட்சிகளிலும் கண்ணாடி இழை கேபிள் அமைக்கும் பணிக்கான சர்வே முடிவடைந்து உள்ளது. 189 கி.மீ பூமிக்கு அடியிலும் 320 கி.மீ மின் கம்பம் வழியாகவும் கண் ணாடி இழை கேபிள் இணைக்கும் பணி நடைபெற உள்ளது.

    ஒரு வருட காலத்தில் பணி முடிவடையும், குமரி மாவட்டத்தில் அதிக அளவில் மரங் அதிக அளவில் காற்று வீசுவதாலும் மின் கம்பம் மூலம் கேபிள் இணைக்கும் கிராமங்கள் குறித்த அறிக் கையினை முன்னதாக அளிக்கவும், தேவைப்பட டால் அவற்றை பூமிக்கு அடியில் மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

    மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் நிறுவனம் மற்றும் பாரத்சஞ்சார் நிகாம் லிட் நிறுவனங்களையும் இணைக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துண்டிக்கப்ப டும் குடிநீர் இணைப்புகள் உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும் தெரிவிக்கப்பட்டது.

    இத்திட்டம் வருகிற 9-ந்தேதி தமிழக முதல்வ ரால் குமரி மாவட்டம் முத்தலக்குறிச்சி ஊராட்சி யிலும், திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சியிலும் காணொலி காட்சி வாயி லாக தொடங்கி வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப் பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திட்ட தலைமை ஐடிஐ மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×